Searching...
Monday 1 July 2013

சுவடுகள்

00:03
சொல்லுகின்ற  பதை எல்லாம் 
சிறந்திருக்க வேண்டும் நாம் 
சொல்லுகின்ற வார்த்தை எல்லாம் 
சுகம் கொடுக்க வேண்டும் 

பள்ளம் மேடு பார்க்கும் நிலை 
நமக்கு மட்டும் அல்ல உலகம் 
பயன் பெறவும் நலம் பெறவும் 
பதை தெரிந்து செல்ல 

தள்ளுகின்ற எண்ணம் தோன்றும் 
தள்ளி ஒதுக்க வேண்டும்  அதை 
வெல்லுகின்ற நல்ல செயலை 
விழிகள் பார்க்க வேண்டும் 

நினைத்து பார்த்து நினைத்து பார்த்து 
நோக்கும் மனதை மாற்று இனி                                                        
நேரமில்லை நோவதற்கு 
என்ற  நிலையே போற்று 

அலை அடிக்கும் கடலில் படகு 
நிலை இல்லாமல் ஆடும்  அதை 
அடக்கும் துடுப்பு என்பது போல் 
அறிவில் ஞானம் தேடு 

வந்து வாழ்த்து மறைந்து போகும் 
வாழ்கை வாழ்கை அல்ல நாம் 
நின்று நிறுத்தும் "சுவடுகள் "தான் 
நினைவில் நிறைந்து  வெல்லும் 
                                                -நன்றி  கவிஞர் நம்பிக்கை நாகராஜன்  அவர்களுக்கு 

0 comments:

Post a Comment